Skip to main content

Posts

Recent Post

Kathai Sollukiren Vanga Youtube Channel

ஒரு நிமிடக் கதை: வாட்ச்மேன்

இரவு மணி பத்து. கடைசி பஸ்ஸை பிடிக்க விரைந்த மாணிக்கத்தின் கண்ணில் அந்த ஏடிஎம்மில் அமர்ந்திருந்த வாட்ச்மேன் தட்டுப்பட்டார். ‘இது நம்ம தங்கராசு மாதிரியில்ல இருக்குது?’ மனதில் கேட்டுக் கொண்டவர் ஏடிஎம்மை நெருங்கினார். அது அவர் நண்பர் தங்கராசுவேதான். “எலே தங்கராசு என்னாச்சு? வயசான காலத்துல எதுக்கு உனக்கு இந்த வேலை? இப்பத்தான் பையனுக்கு கல்யாணம் பண்ணிவச்சே, அதுக்குள்ள மருமக கொடுமைப்படுத்த ஆரம்பிச்சுட்டாளா?” கேட்ட நண்பனை கையமர்த்தினார் தங்கராசு. “அந்த புள்ளையைப் பத்தி அப்படி எல்லாம் பேசாதே. என் மருமக தங்கம்.” “அப்ப எதுக்கு உனக்கு இந்த வாட்ச்மேன் உத்யோகம்? கல்யாணத்துக்கு முந்தி உன்னை உக்கார வச்சு சோறு போட்ட பையன் இப்ப வேலைக்கு அனுப்பியிருக்கான்னா அப்படித்தானே நெனைக்கத் தோணுது?” “அவங்க யாரும் என்னை வேலைக்கு அனுப்பலை. நானாத்தான் வந்தேன்.” “ஏண்டா வயசான காலத்துல பணம் சம்பாதிக்கற ஆசை வந்திடுச்சா?” “அதெல்லாம் இல்லடா. உனக்குத் தெரியும், எங்க வீட்ல மொத்தமே ஒரு ரூமும் ஒரு கிச்சனும்தான்னு. பையனுக்கு இப்பத்தான் புதுசா கல்யாணம் ஆகியிருக்கு. முன்னாடின்னா நானும் என் பையனும் மட்டும்தான் வீட்டுல இருப்போம். இ...

மனிதாபிமானம்: ஒரு நிமிடக் கதை

“சிவா எங்கே இருக்கீங்க?” கேட்டவர் பெரிய தொழிலதிபர் மாணிக்கம். “வீட்லதான் சார்” “நான் உங்க ஆபீஸ் வாசலில்தான் வெயிட் பண்றேன். சீக்கிரம் வாங்க. உங்ககிட்டே ஒரு முக்கியமான வேலையை ஒப்படைக்கணும். அதுக்கு அட்வான்ஸா அம்பதாயிரம் ரூபாயை இப்ப வந்து வாங்கிக்கங்க.” “இதோ வர்றேன் சார்.” ‘அடடா.. நாம பணக்கஷ்டத்தில் இருக்கோம்னு கடவுள் நமக்காக ஒரு ஆளை உதவி செய்ய அனுப்பியிருக்கார்’ என்று நினைத்தபடி வண்டியை எடுத்தான் சிவா. வரும் வழியில் ஓரிடத்தில் கசகசவென்று கூட்டம். சிவா தன் பைக்கை ஓரமாக நிறுத்திவிட்டு எட்டிப்பார்த்தான். அங்கே பதினைந்து வயது மதிக்கத்தக்க ஒரு பையன் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தான். “ஏங்க பையன் யாரு? என்னாச்சு?” “தெரியல. லாரிக்காரன் இடிச்சுட்டு போயிட்டான்” “108-க்கு போன் பண்ணியாச்சா?” “அரை மணி நேரமாச்சு. இன்னும் வரல” ‘பேசாம நாமளே கொண்டு போய் ஹாஸ்பிடல்ல சேர்த்துடுவோமா?, அய்யய்யோ அங்கே சார் வேற வெயிட் பண்ணிக்கு இருக்காரே. அவர் கொடுக்கறதா சொன்ன பணத்தை வச்சுத்தான் இன்னைக்கு சில கமிட்மென்ட்டை செட்டில் பண்ணலாம்னு நினைச்சேன்' இப்படி பல யோசனைக்கு பின் ஒரு முடிவுக்கு வந்தான் சிவா. ஒரு ஆட்டோ...

சருமத்தை பளபளப்பாக்கும் பச்சை திராட்சை

பருத்தொல்லைக்கு முற்றுப்புள்ளி வைப்பதுடன், பருக்கள் வராமலும் தடுக்கிறது பச்சை திராட்சைச் சாறு. இரண்டு புதினா இலைகளை இடித்து எடுத்த  சாறுடன் அரை டீஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் கலந்து கொள்ளுங்கள். இது பேஸ்ட்டாகும் அளவுக்கு சிறிது திராட்சைச்சாறு, எலுமிச்சைச் சாறு கலந்து முகத்தில் பூசுங்கள். 10 நிமிடம் கழித்து கழுவினால், முகத்தில்  இருக்கும் பருக்கள் மறையும். மேற்கொண்டு பருக்கள் வராமல் தடுக்கும். சருமமும் மிருதுவாகும். தொய்வடைந்த தோலை இறுக்கமாக்கி, இளமைத் தோற்றம் தருகிறது பச்சை திராட்சைச் சாறு. ஒரு முட்டையின் வெள்ளைக் கருவை ஒரு  கிண்ணத்தில் எடுங்கள். அதே அளவுக்கு திராட்சைச் சாறையும் எலுமிச்சைச் சாறையும் எடுத்து, வெள்ளைக் கருவுடன் சேர்த்து நன்றாக அடித்துக்  கொள்ளுங்கள். இதை முகம், கழுத்து, கை ஆகிய பகுதிகளில் பேக் ஆகப் போட்டு 20 நிமிடம் காயவிட்டு கழுவுங்கள். பச்சை திராட்சை, சருமத்தை மிருதுவாக்கும்.  எலுமிச்சைச் சாறு, சருமத்தை சுத்தப்படுத்தும். முட்டை, தொய்வடைந்த தோலை இறுக்கமாக்கும். இதுபோல வாரம் இருமுறை செய்துவர முதுமைத்  தோற்றம் மறைந்து இளமை மிளிரும். சிவப்பழகை ஜொலிக்...

ந‌ல்ல தூ‌க்கமே ஆரோ‌க்‌கிய‌த்‌தி‌ற்கு அ‌றிகு‌றி

தூங்கச் செல்வதற்கு முன்பு குளிப்பதும் நல்லது. தூக்கத்துக்கும், இரவு உணவுக்கும் குறைந்தது 2 மணி நேர இடைவெளியாவது தேவை. தூங்குவதற்கு முன் நல்ல புத்தகங்களைப் படிக்கலாம். தூங்கச் செல்லுவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பு காபி, டீ போன்றவற்றை தவிருங்கள். பால் குடிக்கலாம். தூக்கத்திற்கான சூழலை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். நன்றாக தூங்குங்கள். பின்னர் சுறுசுறுப்பு தானா வந்து ஒட்டிக் கொள்ளும்.

இளநரை ஏன் வருகிறது?

தற்போது கல்லூரி மாணவிகள், மாணவர்கள் கூட இள நரையால் பாதிக்கப்படுகின்றனர். தலைமுடிக்கு கறுப்பு நிறத்தை தரும் மெலனின் குறைவதால்  இளநரை தோன்றுகிறது. சத்தான உணவுகளை தவிர்ப்பது, கவலை, மனச்சோர்வு, வம்சாவளியாக கூட இளநரை தோன்றும். மேலும் கெமிக்கல்  பொருட்களும் இளநரையை ஏற்படுத்தும். எனவே கெமிக்கல் பொருட்களால் ஆன அழகு சாதனங்களை தலை முடிக்கு பயன்படுத்துவதை தவிர்க்க  வேண்டும். குளோரின் கலந்த தண்ணீரில் தலைக்கு குளிப்பதையும் தவிர்ப்பது நல்லது. நெல்லிக்காயை தினமும் சாப்பிட்டு வந்தால் நரை முடி மறையும். இரும்புச்சத்து, வைட்டமின் பி 12, காப்பர் சத்து போன்றவை தலைமுடிக்கு மிகவும்  அவசியம். இதற்காக முளைக்கீரை, பொன்னாங்கண்ணி கீரை, முருங்கை கீரை போன்ற கீரைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும். நெல்லிக்காய், கறிவேப்பிலை, மருதாணி போன்றவை சேர்த்து காய்ச்சிய எண்ணெயை தலைமுடிக்கு பயன்படுத்துவது மிக மிக நல்லது. இதை  தொடர்ந்து பயன்படுத்தினால் இளநரை மறையும். மருதோணி இலையை மையாக அரைத்து நெல்லிக்காய் தூள், வெந்தயத்தூள், எலுமிச்சை சாறு கலந்து முதல்நாள் இரவே ஊறவைக்க வேண்டும்.  தயிர் கூட...

புதினா

புதினா இலையில் மருத்துவ குணங்கள் நிறைய இருக்கின்றன. ஆஸ்துமா, உள் நாக்கு வளர்தல், மூட்டு வலி ஆகியவற்றைக் குணப்படுத்த வல்லது. ஜீரண சக்தியை தூண்டக்கூடியது. வாய் துர் நாற்றத்தைப் போக்க வல்லது. எல்லாவற்றிற்கும் மேலாக உடற்சூட்டைத் தணிக்க உதவும். பழச்சாறு பரிமாறும் பொழுது அதன் மேல் ஓரிரு புதினா இலைகளைத் தூவி பரிமாறலாம். நாம் குடிக்கும் நீரிலும் கூட போட்டு வைக்கலாம். இதனால் வயிற்றுவலி, வயிற்றுப் பொருமல் ஆகியவற்றிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.

3 மாதத்தில் தொப்பையை குறைக்கும் உடற்பயிற்சி – க்ரஞ்சஸ் பயிற்சி.! {Crunches Exercise}

இன்றைய இளைஞர்களை அனைவரையும் பாடாய் படுத்தும் பிரச்சினை எதுவென்றால் அது தொப்பை. இந்த தொப்பையை குறைக்க அவர்கள் எந்த விதமான முயற்சியும் எடுக்க நேரம் கிடைப்பதில்லை. அப்படிப்பட்டவர்களுக்கு வீட்டில் இருந்தபடியே செய்யக்கூடிய எளிய பயிற்சியை தெரிந்து கொள்ளுங்கள். இந்த பயிற்சியை தொடர்ந்து தினமும் செய்து வந்தால் 3 மாதத்தில் தொப்பை படிப்படியாக குறைவதை காணலாம். செய்முறை: முதலில் விரிப்பில் கால்களை நேராக நீட்டி படுத்துக் கொள்ளவும். கைகளை உடலோடு ஒட்டி வைக்கவும். பின்னர் கால்கள் இரண்டையும் முட்டி வரை மடக்கவும். இயல்பான சுவாசத்தில் இருந்தபடி மெதுவாக முன்னோக்கி வந்து கைகளால் கால் முட்டியை தொடவும். இவ்வாறு எழும் போது முதுகு வளைய கூடாது. படத்தில் உள்ளபடி தான் செய்ய வேண்டும். அப்போது தான் முழுபலனையும் பெற முடியும். இவ்வாறு இந்த பயிற்சியை தினமும் 30 முறை செய்ய வேண்டும். பார்க்க எளிமையாக தெரிந்தாலும் செய்யும் போது இந்த பயிற்சி சற்று கடினமாக தான் இருக்கும். ஆரம்பத்தில் இந்த பயிற்சியை குறைந்த எண்ணிக்கையில் உங்களால் முடிந்த அளவு செய்தால் போதுமானது. பின்னர் படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து 50 முறை கூட ...