Skip to main content

Posts

Showing posts with the label stoys

Recent Post

Kathai Sollukiren Vanga Youtube Channel

படித்ததில் பிடித்தது :-- ஒரு புலி வேடனை

ஒரு புலி வேடனைத் துரத்திக்கொண்டு போயிற்று. வேடன் அருகில் இருந்த மரத்தில் ஏறிக் கொண்டான். அதற்கு முன்பே, மரத்தின் மீது ஒரு கரடி இருந்தது. புலி கரடியிடம் கூறிற்று: இவ்வேடன், நமது மிருக குலத்துக்கே பகைவன்;

சித்திரக்கதை: கஞ்சனை வீழ்த்திய பேராசை

                       ஆத்திக்குடி அழகிய கிராமம். அந்த கிராமத்தில் அழகிரிசாமி வசித்துவந்தான். சரியான கஞ்சன். வெறும் கஞ்சனல்ல,வடிகட்டின கஞ்சன் இந்த அழகிரிசாமி. எந்த வேலையும் செய்ய மாட்டான். வேலை செய்தால் பசிக்குமே…! பசித்தால் காசு செலவழித்துச் சாப்பிட வேண்டுமே…! என்று சும்மாவே தண்ணீர் குடித்துவிட்டு இருப்பான் அழகிரிசாமி. ‘அய்யோ…பாவம்…!’ என்று யாராவது இரக்கப்பட்டு ஏதாவது கொடுத்தால் போதும்; வஞ்சகமில்லாமல் சாப்பிடுவான். “நீதான் கையிலே காசு வச்சிருக்கியே, ஏதாவது வாங்கிச் சாப்பிடேன்…!” என்று சொன்னால், உடனே அவனுக்குக் கோபம் வந்துவிடும்.

ஒரு நிமிடக் கதை - சுதந்திரம்

போஸ் ஓய்வு பெற்ற அரசு அலு வலர். வீட்டில் கண்டிப் புக்கு பெயர் போனவர். இன்ஜினீயரிங் படித்து முடித்த ஒரே மகன் வாசுவுக்கு தனது சிபாரிசில் வேலை வாங்கித் தர மறுத்துவிட்டார். “அவனுக்கு திறமை இருந்தால் அவனே வேலை வாங்கி கொள்ளட் டும்” என்று பிடிவாதமாக இருந்து விட்டார். வாசுவும் வேலைக்கு முயற்சி செய்து எதுவும் நடக்கவில்லை. தினமும் நண்பர்களோடு வெளியே கிளம்பி விடுவான். தெருவின் எல்லையில் உள்ள ஒரு சிதிலமடைந்த சுவரில் அமர்ந்து இரவு வரை அரட்டை அடித்துவிட்டு வீட்டுக்கு வருவான். “தண்டச்சோறு ... இந்த காலத்து பசங்களுக்கு பொறுப்பே இல்லை. எல் லாம் உங்களுக்கு பெத்தவங்க கொடுக் குற சுதந்திரம்” என்று திட்டினாலும் வாசு மவுனமாகிவிடுவான்.

ஆறுதலே சிறந்த மருந்து..

. ஒரு ஊரில் ஒரு கணவன் மனைவி இருந்தனர் அவர்களுக்கு 12 ஆண்டுகள் கழித்து ஒரு மகன் பிறந்தான்.அந்த குழந்தையை இரண்டு பேரும் கண் போல் காப்பாற்றி வந்தனர். ஒரு நாள் அந்த 2 வயது குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது, அதன் அருகில் ஒரு மருந்து பாட்டில் திறந்து இருப்பதை அவன் தந்தை பார்த்தார்.வேளைக்கு போகும் அவசரத்தில் மனைவியிடம் அதை மூடி வைக்குமாறு சொல்லிவிட்டு சென்று விட்டார். அவர் மனைவியும் சரிங்க என்று சொல்லிவிட்டு சமையல் வேலையில் மூழ்கிவிட்டாள்.குழந்தை விளையாடும் போது அந்த பாட்டிலை பார்த்தது, அது கொஞ்சம் குடித்து பார்த்தது இனிப்பாக இருக்கவே முழுவதையும் குடித்துவிட்டது. சமையல் வேலை முடித்து வெளியே வந்த தாயாருக்கு ஒரே அதிர்ச்சி குழந்தை கையில் மருந்து பாட்டிலுடன் மயங்கி கிடந்தது.உடனடியாக பதறி அடித்துக்கொண்டு குழந்தையை மருத்துவமனைக்கு தூக்கி சென்றாள் . மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்துவிட்டு பெரியவர்கள் எடுத்து கொள்ளும் மருந்தை குழந்தை அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டதால் குழந்தை இறந்து விட்டது என்று கூறிவிட்டார்கள். குழந்தை மருந்தை குடித்து இறந்து விட்டது என்று எப்படி கணவனிடம் சொல்வது என்று பயந்து கொண்ட...

கிழவனின் குதிரை

ஒரு கிராமத்தில் வயோதிகர் ஒருவர் வாழ்ந்துவந்தார். அவர் மிகவும் ஏழை. ஆனால் அவரிடம் அழகிய வெள்ளைக் குதிரை ஒன்று இருந்தது. அந்த வெள்ளைக் குதிரையால் அரசர்கள்கூட அந்த வயோதிகர் மீது பொறாமைப்படும் நிலை இருந்தது. அத்தனை எழில் கொண்ட குதிரை அது. பெரும் பணக்காரர்கள் அந்தக் குதிரைக்காக பொன், பொருள்களைக் கொட்டிக் கொடுக்கத் தயாராக இருந்தனர். “இது என்னைப் பொறுத்தவரை ஒரு பிராணி அல்ல. அவன் என் நண்பன். உடைமை அல்ல. ஒரு நண்பனை நான் எப்படி விற்கமுடியும்” என்று மறுத்துவிடுவார். அந்த வயோதிகரோ மிகவும் ஏழை. அவர் தன் குதிரையை விற்பதற்கு எல்லாக் காரணங்களும் இருந்தன. ஆனால் அவர் விற்கவேயில்லை. ஒரு நாள் அந்தக் குதிரை லாயத்தில் இருந்து காணாமல் போனது. ஒட்டுமொத்த கிராமத்தினரும் முதியவரிடம் வந்தனர். “ நீ ஒரு முட்டாள் கிழவன். இந்தக் குதிரை என்றாவது ஒருநாள் காணாமல் போகும் என்று எங்களுக்குத் தெரியும். இவ்வளவு அரிய குதிரையை உன்னால் எப்படிப் பாதுகாக்கமுடியும்? அதை நல்ல விலைக்கு விற்றிருக்கலாம்.” என்றனர். குதிரை தொலைந்து போனது கிழவருக்கு வரும் துரதிர்ஷ்டத்தின் அறிகுறி என்றும் அவர்கள் கூறினார்கள். “குதிரை தொலைந்துவிட்டது மட்...

ஒரு நிமிடக் கதை: அம்மா

தன் அம்மா மீது சங்கருக்கு இருக்கும் மரியாதையை பொடிப்பொடியாக்கி காலி பண்ணவேண்டும் என்பது சித்ராவின் லட்சியம். அதற்கான முதல் காயை இன்று நகர்த்த ஆரம்பித்தாள். “சித்ரா... நான் தினமும் ராத்திரி பசியோட வருவேன்னு தெரிஞ்சு நான் வரும்போது ரெடியா டிபன் பண்ணி வச்சுருப்பே இல்லே?... இன்னைக்கு என்னாச்சு? பசி என் வயித்தை கிள்ளுது. நீ என்னடான்னா இப்பதான் கிச்சனை உருட்டிக்கிட்டு இருக்கே?” டைனிங் டேபிளில் இருந்து சங்கர் சத்தம் போட ஆரம்பித்தான். “இதோ வந்துட்டேங்க. கொஞ்சம் பொறுத்துக்குங்க!” என்று குரல் கொடுத்த சித்ரா, வேண்டுமென்றே தாமதமாக டிபனை ரெடி செய்தாள். சங்கரால் பசி தாங்க முடியவில்லை. ஃப்ரிஜ்ஜில் இருந்த கூல்டிரிங்ஸை கொஞ்சம் பருகிவிட்டு, டைனிங் டேபிளில் இருந்து, டிவி முன் இடம் பெயர்ந்தான். சரியாக அரைமணி நேரம் அவனை காக்க வைத்த சித்ரா, நிதானமாக டிபனை டைனிங் டேபிளில் கொண்டு வந்து வைத்து விட்டு, “கோவிச்சுக்காதிங்க. எனக்கு பீரியட் டைம். வயித்து வலி தாங்கலை. எனக்கு முடியாத இந்த நேரத்தில், உங்க அம்மா எனக்கு கூடமாட ஹெல்ப் பண்ணுவாங்கன்னு எதிர்பார்த்தேன். ஆனா அவங்க வரலை. அதனாலதான் நான் என் சிரமத்தை பொறுத்துக்...

கிராமம் ஒன்றில் ஒரு கணவனும் மனைவியும் ஒற்றுமையுடன் வாழ்ந்தார்கள்

Woman ல் man இருக்கு She ல் he இருக்கு அடடா... . Mrs ல் Mr ம் இருக்கார்! கிராமம் ஒன்றில் ஒரு கணவனும் மனைவியும் ஒற்றுமையுடன் வாழ்ந்தார்கள். வறுமை அவர்களை வாட்டியது. ஒரு நாள் அந்த மனைவி, தன் கணவனைப் பார்த்து வீட்டில் உள்ள காளை மாட்டைக் கொண்டு போய்ச் சந்தையில் விற்று அதில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு ஒரு பெட்டிக்கடை வைத்தால் குடும்பத்தை நகர்த்தலாமே என்று யோசனை கூறினாள். அவனும் உடன்பட்டு மாட்டை ஓட்டிக்கொண்டு சந்தைக்குச் செல்லும் சாலையில் நடந்தார் . வழியில் மாடு அங்குமிங்கும் மிரண்டு ஓடியது. அப்போது ஆடு ஒன்றை ஓட்டிக்கொண்டு வந்த ஒருவர் ; அவரைப் பார்த்து; ஏனய்யா அந்த முரட்டுக் காளையுடன் சிரமப்படுகிறாய்! என்னிடம் கொடுத்துவிடு. அதற்குப் பதிலாக என் ஆட்டைத் தருகிறேன் என்றார் . அதற்கு அவர் மாட்டைக் கொடுத்துவிட்டு ஆட்டை ஓட்டிக் கொண்டு சந்தையை நோக்கிச் சென்றார் . எதிரேயொருவர் கையில் ஒரு பெட்டைக் கோழியுடன் வந்தார் . அவன், அந்தக் கணவனை ஏமாற்றி கோழியென்றால் கையிலேயே தூக்கிக் கொண்டு போய்விடலாம் என்றதும், அதற்கும் கணவன் ஒப்புக்கொண்டு ஆட்டை அவரிடம் கொடுத்துவிட்டுக் கோழியை வாங்கிக் கொண்டு சந்தைக்க...

பூனையை மட்டும் அனுமதிக்காதே

மகத்தான ஞானி ஒருவர் தான் இறக்கும் தருவாயில், தனது சீடனை அழைத்தார். “ ஒரே ஒரு விஷயத்தை மட்டும் ஞாபகம் வைத்துக்கொள். உனது வாழ்க்கையில் பூனையை மட்டும் அனுமதிக்க வேண்டாம்” என்று கூறிவிட்டு மரணத்தைத் தழுவினார். குருவின் கடைசி வார்த்தைகளை ஒரு பெரிய கூட்டமே கேட்டுக்கொண்டிருந்தது. சீடனுக்கோ யோசனையாக இருந்தது. “ நான் ஏன் என் வாழ்க்கையில் ஒரு பூனையை நுழையவிட வேண்டும்? இதுதான் எனது குருவின் ஒட்டுமொத்த கோட்பாடா?” என்று சந்தேகம் எழுந்தது. அவனோ வயதில் இளையவன். அப்போதுதான் இன்னொரு சீடர் உதவிக்கு வந்தார். அவரோ வயதில் முதிர்ந்தவர். அவர் முதுமையை அடைந்துவிட்ட காரணத்தாலேயே அவருக்கு ஆசிரமத்தின் தலைமைப் பதவி தரப்படவில்லை. அவர் இளைய சீடனிடம் கூறினார். “ குரு சொன்னது தொடர்பாக உனக்கு எதுவும் தெரியாது. அவர் வார்த்தைகளுக்குப் பின்னர் நீண்ட கதை ஒன்று உள்ளது. முத்தாய்ப்பான ஒரு பொன்மொழியையே உனக்குக் கூறினார்” என்று தெரிவித்தார். இளைய சீடன் மூத்த சீடரிடம் குருவின் பூர்வாசிரமக் கதையைக் கேட்டான். முன்பொரு காலத்தில் அவர் தனது மனைவியையும் குழந்தைகளையும் வீட்டையும் துறந்து இமாலயத்திற்குச் சென்றார். இமாலயத்தின் அடிவாரத்...

சிறிய தவளைகள்

ஓட்டப்பந்தயத்திற்கான நாளும் நெருங்கி வந்தது. தவளைகளின் ஓட்டப்பந்தயத்தை காண பலரும் கூடி இருந்தார்கள். ஓட்டப்பந்தயத்தில் தவளைகள் ஓடி, அருகில உள்ள ஒரு உயரமான கோபுரத்தை தொட வேண்டும். அது தான் போட்டி விதி. முதலில் தொடுபவர் வெற்றியாளர். போட்டியும் ஆரம்பமானது. கூட்டமாய் கூடி இருந்தோர்கள்... பலரும் இது சுலபமான போட்டி இல்லை. உங்களால் அந்தப் கோபுரத்தை அடைய முடியாது என்று தவளைகளை நோக்கி கத்திக் கொண்டிருந்தனர். ஒரு சிலர் “இந்தத் தவளைகளால் இந்தக் கோபுரத்தில் உச்சியை தொடவே முடியாது! — சாத்தியமே கிடையாது!” என கூறினர் கூட்டத்திலிருந்து இப்படியாக கோசங்கள் வந்த வண்ணமே இருந்தன. மெல்ல ஒவ்வொரு தவளைகளாக, தங்களால் முடியாது என்ற வகையில் சோர்ந்து போட்டியிலிருந்து நீங்கி கொண்டன “இதில எந்தத் தவளையும் அந்த உச்சிய தொடப்போவதில்லை. அது ரொம்ப கடினமானது” — கூடியிருந்தோர் தங்கள் கோசங்களை தொடர்ந்து கொண்டேயிருந்தனர். இப்படியிருக்க, பல தவளைகளும் களைப்படைந்து, போட்டியிலிருந்து நீங்கிக் கொண்டது. ஆனால், ஒரேயொரு தவளை மட்டும் மேலே மேலே முன்னேறிக் கொண்டிருந்தது. எல்லாத் தவளைகளும் கோபுர உச்சியைத் தொடுவது சாத்தியமற்றது என எண்ணி இ...

பிறந்தநாள்: ஒரு நிமிட கதை

இன்று என் ஒரே மகன் கந்தர்வுக்கு பிறந்த நாள். நாங்கள் ஆனந்தமாக கொண்டாடி மகிழ என் கணவர் இப்போது உடன் இல்லை. வேலை நிமித்தமாய் மும்பை சென்றுள்ளார். “சித்ரா, என்னால கந்து பிறந்தநாளுக்கு வர முடியாது. அதுக்காக அப்படியே விட்டுடாதே... அவனுக்கு பிடிச்ச மாதிரி ரெண்டு, மூணு ட்ரெஸ் எடுத்துக் கொடுத்து காலையில மணக்குள விநாயகர் கோயிலுக்கு அழைச்சுட்டுப் போ. அப்படியே அன்னை ஆசிரமத்துல இருக்கிற என் அம்மாகிட்டேயும் அவனை அழைச்சுப் போய் அவங்க கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்க வை.” “சரிங்க...” “ நான் ஆன்லைன்ல சற்குரு ஹோட்டல்ல நூறு பேருக்கு டின்னர் ஆர்டர் பண்ணியிருக்கேன். வீட்டுக்கே டின்னர் தேடி வந்துடும். எல்லாருக்கும் மனசார நீயே உன் கையால பரிமாறு. ஓகே?... நான் இல்லேன்னு வருத்தமே வேணாம். இந்த வருஷம் கந்து பர்த்-டேவுல எந்த குறையும் வராது. பக்காவா பிளான் பண்ணியிருக்கேன். ஹேப்பிதானே?” “இதைவிட வேறன்னங்க வேணும்?” என்று என் கணவனுக்கு பதில் சொல்லிய நான் அன்று இரவு நிம்மதியாக உறங்கினேன். விடிந்தது. அன்னை ஆசிரமத்தில் இருக்கும் மாமியாரிடம் மகனை ஆசீர்வாதம் வாங்கவைக்க அங்கு அவனை அழைத்துச் சென்றேன். அங்கு மாமியார் இல்லை. ...

மூளை என்ற முதலாளி

சூரியன் மறைந்த அந்தி நேரம். நிலா டீச்சர் குடும்பத்தினர் வீட்டு வாசலில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். கவின் அவ்வப்போது சப்… சப்... எனக் கைகளால் உடம்பெங்கும் அடித்துக் கொண்டிருந்தான். வேறொன்றுமில்லை, கொசுக்கள் அவனைச் சூழ்ந்து கடித்துக் கொண்டிருந்தன. கடித்த இடங்களில் கைகளால் அடித்து கவின் கொசுவை விரட்டிக் கொண்டிருந்தான். திடீரெனக் கவினுக்குக் கேள்வி பிறந்தது. “அம்மா! என் கால்ல கொசு கடிக்கிற இடத்துக்கு என் கை உடனே போயிடுது. காலில கொசு கடிக்கிறது கைக்கு எப்படிம்மா தெரியுது?” என்று கேட்டான் கவின். “இவனுக்கு மட்டும் எப்படிம்மா இப்படியெல்லாம் கேள்வி தோணுது?” என்று ரஞ்சனி சிரித்தாள். “கவினுக்கு வரும் சந்தேகங்களாலதான் நீயும் நிறைய விஷயங்கள தெரிஞ்சுக்க முடியுது” என்று கூறிய நிலா டீச்சர், “கவின்! நல்ல சந்தேகத்தைத்தான் நீ கேட்டிருக்க” என்றார். சிரிப்பை நிறுத்திய ரஞ்சனி, “விளக் கமா சொல்லுங்கம்மா” என்றாள். “ஆயிரமாயிரம் அதிசய நிகழ்வுகள் நடக்கிற இடம் நம்ம உடம்புன்னு ஏற்கெனவே சொல்லியிருக்கேன். இப்ப நான் சொல்ல வர்ற விஷயமும் அப்படிப்பட்டதுதான். நம்ம உடம்போட தலைவனா இருந்து, ஒட்டுமொத்த செயல்களை யு...

காய்ந்த இலை.

சீடன் ஒருவன் ஞானம் தேடி ஆசிரமம் ஒன்றில் சேர்ந்தான். அங்கு ஞானம் அடைவதற்கு முதல் படியாக ''நீ உன்னையே உணர்வாயாக'' என்றார் குரு. அது அவனுக்குப் எப்படி என்பது புரியவில்லை. ஒருநாள் அவன் அரசமரத்தடியில் அமர்ந்து இருந்தபோது காய்ந்த இலை ஒன்று மரத்திலிருந்து உதிர்வதைக் கண்டான். அதையே பார்த்துக் கொண்டிருந்த அவன் திடீரென ஆடிப்பாட ஆரம்பித்தான். ஆசிரமத்தில் இருந்த மற்றவர்கள்,''என்ன படித்தீர்கள்? அதை எங்களுக்கும் சொல்லிக் கொடுங்கள்!''என்று கேட்டனர். அந்த சீடன் சொன்னான்,''எதையும் படித்து நான் கற்றுக் கொள்ளவில்லை. மரத்திலிருந்து காய்ந்த இலை ஒன்று விழுவதைக் கண்டேன். என் ஆசை நிறைவேறி விட்டது,'' மற்றவர்கள் சொன்னார்கள், ''நாங்களும்தான் மரத்திலிருந்து இலைகள் விழுவதைப் பார்க்கிறோம். அது உன்னை மட்டும் எப்படி பாதித்தது?'' அதற்கு அவன், ''ஒரு காய்ந்த இலை விழுவதைப் பார்த்ததும் என்னிலிருந்து ஏதோ கீழே விழுந்தது. இன்று இல்லாவிட்டாலும் நாளையாவது நானும் இந்த இலையைப் போல விழுந்துவிடுவேன் என்பதைப் புரிந்து கொண்டேன். பின் எதற்குப் பெருமை,கர்வம் எல்லா...

ஒரு நிமிடக் கதை- சிரிப்பொலி

நல்ல மழை.வானம் தூறிக்கொண்டே இருந்தது. மின்சாரம் வேறு இல்லை. ஒரே இருட்டாகவும் இருந்தது.கைத்தொலைபேசியில் மணியை பார்த்தான் சுப்பையா. அது எட்டை காட்டியது. ‘காலையிலிருந்து ஒரு போன் வரல. இதுக்கு வேற அப்பப்போ காசு போட வேண்டியிருக்கு. மணிபாக்கத்தான் இது லாயக்கு, இனிமேல் யாரு நம்ம கடைக்கு வரப்போகிறார்கள்’ என்று நினைத்தபடி கடையை அடைக்கும் முயற்சியில் இறங்கினான். சுப்பையா ஒரு நடுத்தரவாதி. ஊர் ஒதுக்குப்புறத்தில் ஒரு பெட்டிக்கடை வைத்துக்கொண்டு பிழைப்பை நடத்துபவன். அவன் கடையிலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில்தான் அவன் வீடு. மனைவி, பத்தாவது படிக்கும் ஒரு மகன் என்று குடும்பத்தை வைத்திருப்பவன். மாலை வீட்டிலிருந்து தேநீர் வந்த தூக்கு வாளியைஎடுத்து ஒரு துணிப்பைக்குள் வைத்தவன், மழையில் நனைந்து விடுமோ என்ற கவலையில் தன் அலைபேசியையும் ஒரு பேப்பரில் சுற்றி கவனமாக அந்த துணிப்பைக்குள் வைத்தான். வெளியில் வந்து தன் சைக்கிளை நகட்டினான். சைக்கிளில் காற்று இறங்கி போயிருந்தது. ‘சே....இந்த நேரத்தில் இப்படி பழிவாங்கிவிட்டதே’ என்றவாறு சைக்கிளை கடையிலேயே வைத்து பூட்டிவிட்டு நடக்கலானான். இருட்டைப் பார்த்ததும் ஒருவித பயம்...

ஒருவர் எதற்கெடுத்தாலும் மனைவியுடன் சண்டைப் போடுவார்..

ஒருநாள் 'ஆபீஸ்' போய் வேலை செய்து பார்.. சம்பாதிப்பது எவ்வளவுக் கஷ்டம் என்று புரியும் என்று அடிக்கடி சவால் விடுவார்.. அவள் ஒருநாள் பொறுமை இழந்து, ஒருநாள் நீங்க வீட்ல இருந்து பசங்களை பார்த்துக்கோங்க.. காலைல குளிப்பாட்டி சாப்பிட வச்சு, வீட்டுப் பாடங்கள் சொல்லிக்கொடுத்து சீருடை அணிவித்து பள்ளிக்கு அனுப்புங்க.. அதோடு சமைப்பது துவைப்பது எல்லாத்தையும் செஞ்சுதான் பாருங்களேன்.. என எதிர் சவால்விட்டாள்.. கணவனும் அதை ஏற்றுக் கொண்டான்.. அவன் வீட்டில் இருக்க.. இவள் ஆபீஸ் போனாள்.. ஒரே குப்பை, கூளமாக கிடந்தது ஆபீஸ்.. முதலாளி மனைவி என்பதை மனதில் கொள்ளாமல் கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்தாள்.. வருகைப் பதிவேட்டை சரிபார்த்து தாமதமாய் வருபவர்களை கண்டித்தாள்.. கணக்கு வழக்குகளைப் பார்த்தாள்.. மாலை 5 மணி ஆனதும் வீட்டுக்குப் புறப்பட நினைத்தபோது, ஓர் அலுவலரின் மகள் திருமண வரவேற்பு குறித்து உதவியாளர் சொல்ல, பரிசுப் பொருள் வாங்கிக்கொண்டு கல்யாண மண்டபத்திற்கு சென்றாள்.. கணவர் வராததற்கு பொய்யான காரணம் ஒன்றை சொல்லிவிட்டு, மணமக்களின் கட்டாயத்தால் சாப்பிட சென்றாள்.. பந்தியில் உட்கார்ந்தவளுக்கு சிந்தனையெல்லாம் வ...

ஒரு நிமிடக் கதை - தூரம் அதிகமில்லை

“நான் இங்க பைத்தியக்காரி மாதிரி கத்திக்கிட்டு இருக்கேன். நீங்க யாரோட அவ்வளவு சுவாரஸ்யமா போன்ல பேசிட்டு இருக்கீங்க?!” சுதா கேட்கிறாள். அதைப் பொருட்படுத்தாத அருண் போனில் நிதானமாக “நான் வீட்லதான் இருக்கேன். வந்து ரெண்டு நாள் இருந்துட்டு போங்க. ஒண்ணும் பிரச்சினை இல்லை...!” என்று பேசிவிட்டு போனைத் துண்டித்தான். “இப்ப சொல்லு. என்ன உன் பிரச்சினை?... எதுக்கு நீ இப்ப இப்படி கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணிக்கிட்டு இருக்கே?” அருண், மனைவியிடம் கேட்டான். அதற்கு சுதா, “என்னால இனி இங்க ஒரு நிமிஷம்கூட இருக்க முடியாது. நான் இப்பவே எங்க அம்மா வீட்டுக்கு கிளம்பி போகப்போறேன். நீங்க நாம தனிக்குடித்தனம் பண்ண வாடகை வீடு பார்த்த பிறகு வரேன்...” என்று சொல்லியவாறு தன் உடைகளை சூட்கேஸில் அடைக்கிறாள். அதை பொறுமையுடன் கேட்டுக்கொண்டிருந்த அருண், “சுதா, நீ இப்ப நிலமை புரியாம அவசரப்படறே. உங்க அம்மா வீடு ஒண்ணும் தூரத்துல இல்லை. ஜஸ்ட் இங்கிருந்து முப்பது கிலோ மீட்டர் தூரத்துலதான். அதை நீ மனசுல வைச்சுக்க...” என்றான். “எங்க அம்மா வீட்டுக்கும், இந்த வீட்டுக்கும் தூரம் அதிகமில்லை தான். ஆனா, உங்க குடும்பத்துக்கும், எனக்கும் தூர...

எது உண்மைக் காதல் - மாத்தி யோசி

ஆனந்தும், சுந்தரும் கல்லூரி தோழர்கள். ஆனந்துக்கு காதல் என்றால் எல்லையில்லா ஆனந்தம். சுந்தருக்கோ இந்த வார்த்தை சுத்தமாக பிடிக்காது. சுந்தரை சந்திக்கும் போதெல்லாம் ஆனந்த், தன்னுடைய காதல் குறித்து மகிழ்ந்து பேசுவான். மச்சான், ‘மிருதுளா என் தேவதை. அந்தி சாயும் அந்த மாலைப் பொழுதில், அர்த்தனாரீஸ்வரர் கோயில் வாசலில் அவளை பார்த்த அந்த நாளை, எந்த நாளும் என்னால் மறக்க முடியாது. அவள் மட்டும் என் அருகில் இருந்தால் போதும். இந்த பூமியில் வேறு எதுவும் எனக்கு தேவையில்லை. என் உயிருக்கு மேலாக அவளை நேசிக்கிறேன்.’’ இது சுந்தரை பார்க்கும் போதெல்லாம் ஆனந்தின் உதடுகளிலிருந்து உணர்ச்சி பெருக்கோடு வெளியேறும் வார்த்தைகள். ஆனந்தின் காதல் பேச்சுக்கு சுந்தர் எப்போதுமே செவி சாய்ப்பதில்லை. சில நேரங்களில் கடுப்பாகும் ஆனந்த், ‘‘காதல் என்றால் என்னவென்று தெரியாத நீயெல்லாம் ஒரு மனுசன், உங்கிட்ட போய் என் காதல் கதையை சொன்னேன் பார்’’ என்று சுந்தரிடம் அலுத்துக் கொள்வான். அன்றைய தினம் அதிகாலை நேரத்தில் வீட்டில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தான் சுந்தர். கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டு, திடுக்கிட்டு எழுந்தான். அதற்குள் அவனது த...

ராஜாவை மிரட்டிய கனவு

  கோட்டையூரை ஆண்டு வந்த ராஜாவுக்கு வெகு நாட்கள் கழித்துக் குழந்தை பிறந்தது. குழந்தைப் பிறந்ததும், அந்தக் குழந்தையை உலகிலேயே ஈடில்லாத, மிகச் சிறந்த குழந்தையாக நான் வளர்ப்பேன் என்று ராஜா உறுதிபூண்டார். 9 மாதத்திலேயே அ, ஆ, இ, ஈ….சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தார். எழுந்து நடக்க ஆரம்பித்தவுடன் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பி வைத்தார். பள்ளிக்கூடம் விட்டு குழந்தை வந்ததும் ராஜா விளையாட விடவில்லை. விளையாட்டெல்லாம் வீண். குழந்தைகள் படிக்கத்தான் வேண்டும். அதைத் தவிர வேறு எதுவும் செய்யக் கூடாது என்று எல்லோரிடமும் சொன்னார். சொன்னது மட்டுமல்ல, அதை சட்டமாகவும் போட்டார். ராஜா போட்ட சட்டத்தை யாராவது மீற முடியுமா? நாடெங்கும் குழந்தைகளைப் படி..படி…படியென்று அம்மா, அப்பாக்கள் தொந்தரவு செய்தார்கள். தெருக்களில் குழந்தைகளைப் பார்க்கவே முடியவில்லை. குழந்தைகள் இல்லாததால் விளையாட்டுகள் விளையாடவும் ஆட்கள் இல்லை. பகலில் சூரியனும் இரவில் சந்திரனும் அழுதன. தெருவிலுள்ள புழுதிகூட அழுதது. குழந்தைகளும் விளையாட முடியாமல் அழுது கொண்டேயிருந்தார்கள். இவர்கள் எல்லோரும் அழுகின்ற சத்தம் குழந்தைகளுக்கான தேவதைக்குக் கேட்டது. க...

மூன்று சோம்பேறிகளும் ஒரு வழிப்போக்கனும்

ஒரு பழைய கிராமம். அதில் ஒரு கல்மண்டபம். அங்கே எப்போதும் மூன்று சோம்பேறிகள் உட்கார்ந்துகொண்டு வழிப்போக்கர்களை வம்புக்கிழுத்து நேரத்தைப் போக்கடித்துக் கொண்டிருப்பார்கள். ஒருநாள் அந்த வழியே ஒரு வெளியூர்க்காரர் வந்தார். சோம்பேறிகள் வழக்கம்போல் பேச்சு கொடுக்கத் தொடங்கினார்கள். ஒரு சோம்பேறி சொன்னான், “நேரம் போகவேண்டுமல்லவா. நமக்குள் ஒரு பந்தயம் வைத்துகொள்வோம். ஆளுக்கொரு கதை சொல்ல வேண்டும். அதை மற்றவர்கள் நம்ப வேண்டும். நம்பாவிட்டால் கதை கேட்டவர் கதை சொன்னவருக்கு அடிமை. சரிதானே ? ” வழிப்போக்கர் ஒப்புக் கொண்டார். கல் மண்டபத்தில் இருந்த ஒரு ஊர்க்காரர் ஒருவர் முன்னிலையில் கதை சொல்லத் தொடங்கினார்கள். முதல் சோம்பேறி சொன்ன கதை இது. “ஒருநாள் பக்கத்துக் காட்டுக்குள்ளே ஒரு வகையான மருத்துவக் குணம் கொண்ட மரத்தின் காய்களைத் தேடிப்போனேன். அந்த மரத்தைத் தேடிக் கண்டுபிடிக்கவே ரொம்ப நேரம் ஆகிவிட்டது. அது உயரமான மரம். மரத்தில் ஏறிக் காய்களைப் பறித்துக்கொண்டிருக்கும்போதே இரவு நேரம் வந்துவிட்டது. ஒரே இருட்டு. கீழே இறங்க வழி தெரியவில்லை”. வழிப்போக்கர் கேட்டார், “ அட..டே என்ன செய்தீர்கள்?” முதல் சோம்பேறி சொன்ன...

ஒரு நிமிட கதை: அழகு

சாரதா மனதுக்குள் வருந்தினாள். இந்த முறையும் மகனுக்கு பெண் பார்க்க போகும்போது அவன் நண்பன் பிரவீனும் கூட வருகிறான் என்பதே வருத்தத்துக்கு காரணம். சாரதாவின் மகன் சுந்தர் கருப்பு நிறம். சராசரிக்கும் கீழே அழகு, ஆனால் அவன் நண்பன் பிரவீன் எலுமிச்சை நிறம், அசப்பில் நடிகர் அஜீத்தைப் போல் இருப்பான். பெண் பார்க்கப் போகும் போதெல்லாம் அவனையும் சுந்தர் தவறாமல் அழைத்துபோவான். பார்க்கும் பெண் எல்லாம் அவனையும் தன் மகனையும் ஒப்பிட்டுப் பார்த்து வேண்டாம் என்று சொல்லி விடுகிறார்கள், இது சுந்தருக்கு தெரியவில்லையே என்பதுதான் சாரதாவின் வருத்தம். மகனிடம் தன் குமுறலை வெளியிட்டாள். “சுந்தர் இந்த முறை பெண் பார்க்கப் போகும் போது நம்மகூட பிரவீன் வரவேண்டாம்பா?” “அம்மா நீ ஏன் பிரவீன் வரவேண்டாம்னு சொல்லுறேங்கிறது எனக்குத் தெரியாம இல்லை, பிரவீன் கூட என்னை ஒப்பிட்டு பார்த்திட்டு பொண்ணுங்க என்னை புடிக்கலைன்னு சொல்லுறாங்க அதானே?. இன்னைக்கு என்னை புடிக்குதுன்னு சொல்லி கல்யாணம் பண்ணிட்டு கொஞ்சம் நாள் கழிச்சு என்னை பிடிக்கலைன்னு சொல்லிட்டு போய்ட்டா என்னம்மா பண்றது?” மகன் கேட்ட கேள்வியில் ஆடிப்போனாள் சாரதா. சுந்தர் தொடர்...

விலை இல்லாத பாசம் - மாத்தி யோசி

பிள்ளைகளின் முன்னேற்றத்திற்காக மாடாய் உழைத்து, ஓடாய் இழைத்து ஓய்ந்த நிலையில் புறந்தள்ளப்பட்ட முதியவர்கள் வாழும் இல்லம் அது. அங்கு நடந்த விழாவிற்கு தலைமையேற்கச் சென்றார் அதிகாரி ரங்கநாதன். மைக்கை பிடித்த ரங்கநாதன் உணர்ச்சி பொங்க பேசினார். ‘‘உதிரம் கொடுத்து வளர்த்த பெற்றோரை ஒதுக்குபவர்கள், மனிதனாக இந்த சமுதாயத்தில் வாழத் தகுதியற்றவர்கள். ஏணியாய் இருந்து நம்மை ஏற்றி விட்டவர்களை எட்டி உதைப்பது எவ்வளவு கொடுமையானது என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும். சமுதாயத்தில் இந்த அவலநிலையை மாற்றி, பெற்றோரை பொக்கிஷமாய் பாதுகாக்க, அனைவரும் முன்வர வேண்டும். இதற்கான பணியை, இந்த இல்லத்திலிருந்தே துவக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசிக்கொண்டிருந்த போது 3வது வரிசையில் முகம் தெரியாமல் நின்றிருந்த 70வயது அலமேலு அம்மாள் நிலைதடுமாறி கீழே விழுந்து மயக்கமானார். மேடையில் இருந்து ஓடிவந்த கருணை இல்ல ஊழியர்கள், முகத்தில் நீர் தெளித்து அவரை எழுப்ப ஆயத்தமானார்கள். அப்போது அங்கு வந்த ரங்கநாதன், அலமேலு அம்மாவின் முகம் கண்டு அதிர்ந்தார். ‘ஆம். ஐந்து வருடத்திற்கு முன்பு ரங்கநாதனால் புறக்கணிக்கப்பட்டு வீட்டை விட்டு வெளியேறி, கர...