Skip to main content

Posts

Recent Post

Kathai Sollukiren Vanga Youtube Channel

உயிர் கொடுக்கும் தோழன்

படம்: எஸ்.ஆர்.ரகுநாதன் ரத்தம் என்பது நமது உயிர் இயந்திரம் இயங்கத் தேவையான அடிப்படை அம்சம். அது எல்லோருக்கும், எந்த வயதினருக்கும் எப்பொழுது வேண்டுமானாலும் தேவைப்படலாம். விபத்து, அறுவை சிகிச்சை, நோய் எனப் பல காரணங்களுக்காக ரத்தம் தேவைப்படுகிறது. ஆனால், திரைப்படங்களில் காட்டப்படுவது போல, ஒருவரின் கையில் இருந்து ரத்தத்தை எடுத்து இன்னொருவருக்கு நேரடியாகக் கொடுப்பது என்பதெல்லாம் நிஜத்தில் எந்தக் காலத்திலும் முடியாது. அப்படியானால், விபத்தில் அடிபட்டவர்களுக்கு, அறுவை சிகிச்சை செய்து கொள்பவர்களுக்கு, நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்படி ரத்தம் கொடுப்பது? ரத்த வங்கிகள் ரத்தத்தைப் பெற்று, அதைப் பாதுகாப்பாகச் சேமித்து வைத்து, தேவையான நேரத்தில் தரும் பணியை ரத்த வங்கிகள் செய்துவருகின்றன. அதாவது, ரத்த தானம் கொடுக்க விரும்புபவர்களிடம் இருந்து ரத்தத்தைப் பெற்று, ரத்தம் தேவைப்படுவோருக்குக் கொடுத்து உதவும் அமைப்புதான் ரத்த வங்கி. ரத்தத்தில் நான்கு வகைகள் உள்ளன. ஏ, பி, ஓ, ஏபி ஆகியவையே அவை. இதிலும்கூட ஏ பாசிட்டிவ், ஏ நெகட்டிவ், பி பாசிட்டிவ், பி நெகட்டிவ், ஓ பாசிட்டிவ், ஓ நெகட்டிவ், ஏபி பாசிட்டிவ்...

மாடிப்படிக்கு அடியில் மின் மீட்டர் வைக்கலாமா?

கோப்பு படம் * மின் இணைப்பு பெறுவதற்கு மின் வாரிய பிரிவு அலுவலகங்களில் இலவசமாக வழங்கப்படும் படிவத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். மின் வாரிய உரிமம் பெற்ற மின் பணி ஒப்பந்ததாரர்கள் மூலம், தரமான பொருட்களைக் கொண்டு மின் கம்பி அமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். நல்ல நில இணைப்பு (எர்த்) கொண்ட மும்முனை குழல் உறைகளில் (த்ரீ பின் சாக்கெட்) மட்டுமே, மின் கருவிகளைப் பொருத்தவேண்டும். * மின் வாரிய மீட்டர், கருவிகளைத் தாங்களாகவே மாற்றவோ, சேதம் விளைவிக்கவோ கூடாது. கட்டிடம் கட்டும்போது, மின்சார விதிகளின் படி உயரழுத்த, தாழ்வழுத்த மின் கம்பிகள் இடையே போதிய இடைவெளி விடவேண்டும். மின் சாதனங்கள், மின் இணைப்பு வழித்தடங்கள் அருகில் பொருட்களை வைப்பது விபத்தை ஏற்படுத்தும். பழுதான மின் பொருத்தங்கள் (பிளக்), கருவிகளை கண்டிப்பாகப் பயன்படுத்தக் கூடாது. * மொத்த மின் இணைப்புச் சுமை ஒரே நேரத்தில் 4000 வாட் அளவுக்கு அதிகரிக்கும்போது, ஒற்றை ஃபேஸ் (Single Phase) இணைப்பிலிருந்து, 3 ஃபேஸ் (Three Phase) அமைப்புக்கு மாற்ற, மின் வாரிய அதிகாரிகளை தொடர்புகொள்ள வேண்டும். * அனைத்து கட்டிடங்களிலும், தரை தளத்தில்தான் மின் அளவ...

மின் திருட்டு எப்படி நடக்கிறது?

மின் திருட்டு என்றால் என்ன? மின்சார ஒழுங்குமுறை ஆணைய விதிகளுக்கு அப்பாற்பட்டு மின்சாரத்தை தவறாகப் பயன்படுத்தும் அனைத்து முறைகளும் மின் திருட்டாகவே கணக்கில் கொள்ளப்படுகிறது. எதெல்லாம் மின் திருட்டு? டிரான்ஸ்பார்மர், தெருவோர மின் இணைப்புப் பெட்டி, மின் கம்பம் ஆகியவற்றில் கொக்கி போட்டு மின்சாரம் திருடுவது. ஒரு வீட்டில் இருந்து மற்றொரு வீடு அல்லது வணிகத்துக்கு மின்சாரம் தருவது, வீட்டு பயன்பாட்டுக்கு பெற்று வணிகப் பயன்பாடு போன்ற வேறு வகைக்கு பயன்படுத்துவது, மீட்டரை ஓடவிடாமல் காந்தம் போன்ற பொருளை வைப்பது, மீட்டரை குறிப்பிட்ட நாட்களுக்கு துண்டித்து மின்சாரம் பயன்படுத்துவது, கட்டுமானத்துக்கு தற்காலிக இணைப்பு பெறாமல் ஏற்கனவே உள்ள இணைப்பில் இருந்து மின்சாரம் பெறுவது போன்றவை மின் திருட்டாகும். மின் திருட்டில் எத்தனை வகைகள் உள்ளன? மீட்டரைத் திருத்துதல், மீட்டருக்கு செல்லாமல் மின்சாரத்தை மாற்றுவது, நேரடியாக கொக்கி போடுதல், மீட்டரில் போலி முத்திரை பதித்தல், வேறு கட்டண வீதத்துக்கு மின்சாரத்தை பயன்படுத்துதல், மின் இணைப்புத் துண்டிக்கப்பட்டால், மின் துறை ஊழியர்கள் அனுமதியின்றி, தானாகவே மின் இணைப்...

இதயம் காக்கும் பிஸ்தா

பிஸ்தாவில் அதிக அளவில் வைட்டமின் பி6 உள்ளது. இது, இரத்ததில் ஹீமோகுளோபின் உற்பத்திக்கு மிகவும் அவசியமானது. அதோடு மட்டுமில்லாது செல்களுக்கு ஆக்ஸிஜனை கொடுக்கிறது. பிஸ்தா பருப்பில் டெரிபின்தினேட், இனிப்புச் சுவையுடைய நறுமண எண்ணெய், காலோடானிக் அமிலம் ஆகியன காணப்படுகின்றன. இவை நரம்பு மணடலத்தை தூண்டி, ஹார்மோன்களின் சுரப்பை அதிகப்படுத்தி, புத்துணர்ச்சியை உண்டாக்குகின்றன. பிரசவித்த பெண்கள் பிஸ்தா பருப்பை பாலுடன் வேகவைத்தோ அல்லது நெய்யில் பொரித்தோ சாப்பிட தாய்ப்பால் நன்கு சுரக்கும். ஆண், பெண் இருபாலரும் பிஸ்தா பருப்பை சூடான பாலில் ஊறவைத்து தினமும் மாலையில் சாப்பிட போக சக்தி அதிகரிக்கும். புத்துணர்ச்சி உடலுக்கு புத்துணர்ச்சியையும், சுறுசுறுப்பையும் உண்டாக்குவதில் ஹார்மோன்கள் பெரும் பங்கை வகிக்கின்றன. இந்த ஹார்மோன்களில் சுரக்கும் நாளமில்லா சுரப்பிகள் ஆயுட்காலத்தை நீடிக்கச் செய்யும் அத்தியாவசிய உறுப்புகளாக கருதப்படுகின்றன. இந்த உறுப்புகள் தங்கள் சுரப்பை அதிகப்படுத்தும் பொழுதும், குறைக்கும் பொழுதும் உடலில் பலவித குறைபாடுகள் தோன்றுகின்றன. இந்த நாளமில்லா சுரப்பிகளின் செயல்பாடு மருத்துவ உலகிற்கு சவ...

ஆரோக்கியப் பெட்டகம்: புளி

டயட்டீஷியன் அம்பிகா சேகர் உப்பு, காரமில்லாத உணவு எப்படி பலருக்கும் தொண்டைக்குள் இறங்க மறுக்குமோ, அப்படித்தான் புளிப்புச் சுவை இல்லாத உணவும். இன்னும் சொல்லப் போனால் புளிப்பு சற்றே தூக்கலாக இருந்தால்தான் பலருக்கும் முழுமையாக சாப்பிட்ட திருப்தியே வரும்.புளியிலிருந்து பெரிதாக நமக்கு சத்துகள் எதுவும் கிடைப்பதில்லை. அது சமையலுக்கு ருசி கூட்டுகிற தவிர்க்க முடியாத ஒரு பொருள்... அவ்வளவுதான். வெறும் புளியைக் கரைத்துக் கொதிக்க வைத்து, கொஞ்சம் மிளகு, சீரகம், பூண்டு தட்டிப் போட்டுச் செய்கிற ரசம் பசியோடு இருக்கிற பல நேரங்களில் அமிர்தமாக ருசிக்கும். வெறும் புளித்தண்ணீர்தான்... ஆனாலும், அதற்கு அப்படியோர் சுவை. இன்னும் அன்றாடச் சமையலில் சாம்பார், வத்தக் குழம்பு, கூட்டு என பெரும்பாலான உணவுகளுக்கு புளி சேர்த்தால்தான் ருசியே. தென்னிந்தியச் சமையலைப் பொறுத்த வரை புளிப்புச் சுவைக்கு புளிக்குத்தான் முதலிடம். எலுமிச்சை, மாங்காய் போன்றவை எல்லாம் அப்புறம்தான். புளியில் நிறைய நல்ல அம்சங்களும், கொஞ்சம் கெட்ட விஷயங்களும் உள்ளன. ஆயுர்வேத மருத்துவத்தில் புளிக்கு முக்கிய இடமுண்டு. குறிப்பாக லேகியம் உள்ளிட்ட அவர்களத...

அல்சரால் அவதி வேண்டாம்

இன்றைய அவசரமான வாழ்க்கைச் சூழலில், வயது வித்தியாசமின்றி எல்லோரும் எதிர்கொள்கிற ஆரோக்கியப் பிரச்சினை அல்சர். அதிலும் சாஃப்ட்வேர் நிறுவனங்களின் வருகைக்குப் பிறகு, இந்தியாவில் இளைஞர்களிடமும் இளம்பெண்களிடமும் அல்சர் தொல்லை மிகவும் அதிகரித்துவிட்டது. விரைவு உணவுகள், ரெடிமேட் உணவுகள், பதப்படுத்தப்பட்ட பாக்கெட் உணவுகள், செயற்கை வண்ண உணவுகள் என்று மேற்கத்திய உணவுக் கலாச்சாரம் நம்மிடம் புகுந்துகொண்ட பிறகு, காய்ச்சல், தலைவலி போல் அல்சர் தொல்லை ரொம்பவும் இயல்பாகிவிட்டது. அல்சர் என்பது என்ன? தொண்டையில் தொடங்கி இரைப்பை வரை உணவு செல்ல உதவும் உணவுக்குழாய், இரைப்பை, முன்சிறுகுடல் ஆகியவற்றில் ஏற்படும் புண்களைப் பொதுவாக ‘பெப்டிக் அல்சர்’ (Peptic ulcer) என்கிறோம். இரைப்பையில் புண் ஏற்பட்டால் ‘கேஸ்ட்ரிக் அல்சர்’ (Gastric ulcer) என்றும், முன்சிறுகுடலில் புண் ஏற்பட்டால் ‘டியோடினல் அல்சர்’ (Duodenal ulcer) என்றும் அழைக்கிறோம். இரைப்பையில் உணவு செரிப்பதற்காகச் சுரக்கப்படுகின்ற ஹைட்ரோகுளோரிக் அமிலமும் பெப்சின் எனும் என்சைமும் சில காரணங்களால் அளவுக்கு அதிகமாகச் சுர...

கருவில் உள்ள குழந்தையை காக்கும் ஆப்பிள்

கர்ப்பகாலத்தில் பழங்கள், மீன், முட்டை, போன்ற ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடவேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். அதிகமான  கர்ப்பிணிபெண்கள் ஆரோக்கியமான உணவை உட்கொண்டால் எடை பிரச்சனை ஏற்படக்கூடும் என பயப்படுகின்றனர். ஆனால் நீங்கள் தினமும்  உட்கொள்ளும் உணவில் ஆப்பிள் பழங்களை எடுத்துக்கொள்ளலாம். தினமும் ஒரு ஆப்பிள் பழம் எடுத்துக்கொள்வதால் பளபளப்பான உடல் தோற்றத்தையும் ஆரோக்கியமான உடல் நலனையும் தருவதோடு  மட்டுமல்லாமல் பல நன்மைகளையும் வழங்குகிறது.. கர்ப்பிணி பெண்கள் தினமும் ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் குழந்தை ஆரோக்கியமான உடல் நலம்  கொண்ட குழந்தையாக இருக்கும். பொதுவாக ஆப்பிள் செரிமானத்தை அதிகமாக்கும் உணவுப் பொருள் தான். ஆனால் அதில் உள்ள பெக்டின் என்னும்  கார்போஹைட்ரேட், வாயுத் தொல்லையை உண்டாக்கும். எனவே கர்ப்பிணிகள் இதனை அளவாக சாப்பிடுவது நல்லது. ஒரு ஆப்பிள் பழத்தில் கர்ப்பிணிகள் பயன் பெறும் வகையில் எனர்ஜி, புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட், கால்சியம், பாஸ்பரஸ், நார், இரும்புசத்து,  வைட்டமின் A-B1-B2 மற்றும் சி போன்ற சத்துக்களை கொண்டுள்ளது. பொதுவாக கர்ப்பகால...