சர்க்கரைவள்ளிக் கிழங்கு மசியல்
என்னென்ன தேவை?
வேகவைத்து
மசித்த சர்க்கரைவள்ளிக் கிழங்கு - 2 கப், புளிக் கரைசல் - (ஒரு எலுமிச்சை
அளவு புளியிலிருந்து கரைத்தது), உப்பு, மஞ்சள் தூள் - தேவைக்கு, துவரம்
பருப்பு - வெந்தது 2 கப்.தாளிக்க: கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகாய்
வற்றல், கறிவேப்பிலை, நல்லெண்ணை, கடலைப் பருப்பு.
எப்படிச் செய்வது?
சர்க்கரைவள்ளிக்
கிழங்கை தோல் சீவி, பெரிய துண்டுகளாக நறுக்கி வேகவைத்துக் கொள்ளவும்.
புளி, உப்பு, மஞ்சள் தூள் போட்டு கொதிக்க வைத்த பின் மசித்த கிழங்கு,
பருப்பு வகைகளைப் போட்டு நன்கு கொதித்தபின் கீழே இறக்கி வைத்து
தாளிக்கவும்.
சர்க்கரைவள்ளிக் கிழங்கு சூப்
என்னென்ன தேவை?
சர்க்கரைவள்ளிக்
கிழங்கு - 1, வெங்காயம் -1, ஆலிவ் ஆயில் - 2 டீஸ்பூன், துருவிய இஞ்சி - 1
டீஸ்பூன், நசுக்கிய பூண்டு - 2 பல், கறி தூள் - 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் -
கால் டீஸ்பூன், சீரகத் தூள் - 1 டீஸ்பூன், எலுமிச்சைச்சாறு - 1 டீஸ்பூன்,
தேன் - 1 டீஸ்பூன், தேங்காய்ப் பால் - அரை கப், மிளகு - சிறிது, முந்திரி -
அலங்கரிக்க.
எப்படிச் செய்வது?
சர்க்கரைவள்ளிக்
கிழங்கை ஆங்காங்கே குத்திவிட்டு, 10 நிமிடங்கள் வேக விடவும். ஆறியதும்
சதைப் பகுதியை மட்டும் தனியே எடுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு,
வெங்காயம், இஞ்சி-பூண்டை விழுதாக்கி சேர்த்து வதக்கவும். கறி தூள், மஞ்சள்
தூள், சீரகத் தூள் சேர்க்கவும். கிழங்கு மசியலையும் ஒரு கப் தண்ணீரையும்
சேர்த்துக் கொதிக்க வைக்கவும். தீயைக் குறைத்து, தேன் மற்றும்
எலுமிச்சைச்சாறு சேர்க்கவும். தேங்காய்ப் பால் சேர்த்து, 5 நிமிடங்கள்
குறைந்த தணலிலேயே வைத்திருக்கவும். சூப் பதத்துக்கு வந்ததும் இறக்கி, மிளகு
சேர்த்து, முந்திரியால் அலங்கரித்துப் பரிமாறவும்.
சர்க்கரைவள்ளிக் கிழங்கு -தயிர் சாலட்
என்னென்ன தேவை?
மீடியம்
சைஸ் சர்க்கரைவள்ளிக் கிழங்கு (சுத்தம் செய்து, வட்டமாக ஸ்லைஸ் செய்யவும்)
- 1, வெள்ளரிக்காய் (வட்டமாக ஸ்லைஸ் செய்தது) - 1, சிவப்பு குடைமிளகாய்
(நீளமாக நறுக்கியது) - 1, கடுகு - 1 டேபிள்ஸ்பூன், கொத்தமல்லித் தழை
மற்றும் புதினா - தலா 1 கைப்பிடி, தயிர் - 300 மி.லி., எலுமிச்சைச் சாறு
- சிறிது, உப்பு, மிளகுத்தூள் - தேவைக்கேற்ப.
எப்படிச் செய்வது?
கடுகை
வெறும் கடாயில் பொரிக்கவும். சர்க்கரை வள்ளிக் கிழங்கை ஆவியில் மெத்தென
வேக வைத்து ஆற வைக்கவும். பிறகு அத்துடன் வெள்ளரிக்காய், குடைமிளகாய்,
கடுகு, கொத்தமல்லி சேர்த்துக் கலக்கவும். பிறகு நறுக்கிய கொத்தமல்லி,
புதினா சேர்த்து தயிரும் எலுமிச்சைச்சாறும் சேர்க்கவும். மிளகுத் தூள்,
உப்பு சேர்க்கவும். தேவையானால் இன்னும் சிறிது தயிர் சேர்த்துப்
பரிமாறவும்.
Comments
Post a Comment