Skip to main content

Recent Post

Kathai Sollukiren Vanga Youtube Channel

சுட்டது நெட்டளவு













ஒரு நாட்டில் ஒரு ரஷ்யர், ஒரு சீனர், ஒரு இந்தியர் ஆகிய மூவரும் மது அருந்திய குற்றத்துக்காக கைது செய்யப்பட்டனர்.


மூவருக்கும் தலா 50 சவுக்கடிகள் கொடுக்க நீதிபதி
உத்தரவிட்டார். அத்துடன் அவர்கள் கேட்கும் ஏதாவது 2 கோரிக்கைகளை
நிறைவேற்றலாம் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது.


முதலில் வந்த ரஷ்யர், தனது சவுக்கடிகளை 25 ஆகக் குறைக்க வேண்டும் என்று கோரினார்.


இதற்கு ஒப்புக்கொள்ளப் பட்டது.





இரண்டாவதாக தன் முதுகில் 2 தலையணைகளைக் கட்ட வேண்டும் என்று கூறினார். அவ்வாறே செய்யப்பட்டது.


ஆனால் பத்து சவுக்கடியில்.. தலையணை கிழிந்து அவர்.. பலமான காயத்துக்கு ஆளானார்.


அடுத்து சீனர்.


“எனக்கும் 50 சவுக்கடிகளை பாதியாகக் குறைத்து 25 அடி கொடுங்கள்” என்றார்.


ஒப்புக்கொள்ளப்பட்டது.


இரண்டாவதாக தன் முதுகில் 2 தலையணைகளைக் கட்டச் சொன் னார்.


அவ்வாறே செய்யப்பட்டது.


15 சவுக்கடிகளில் தலையணை கள் கிழிந்து அவரது முதுகு பிளந்தது.


அடுத்து இந்தியர்.


“எனக்கு வழங்கப்பட்ட 50 சவுக்கடிகளை 75 ஆக உயர்த் துங்கள்..!” என்றார்.


அங்கிருந்த அனைவரும் அதிர்ச் சியுடன் இதற்கு ஒப்புக்கொண்டனர்.


இரண்டாவது கோரிக்கை என்ன என்று கேட்கப்பட்டது.


“எனக்கு தண்டனை கொடுத்த.. நீதிபதியை.. என் முதுகில் தூக்கி கட்டுங்கள்” என்றார்.






Comments