Skip to main content

Posts

Recent Post

Kathai Sollukiren Vanga Youtube Channel

சுவைக்க தூண்டும் மீன் பிரியாணி

பிரியாணி என்றாலே எல்லோரும் ஒரு பிடிபிடித்து விடுவார்கள். அதுவும் ஞாயிற்றுக்கிழமை ஸ்பெஷலாக எல்லோர் வீட்டிலும் பிரியாணி தான். சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி இருந்தாலும் மீன் பிரியாணிக்கு என்று தனிப்பிரியர்கள் உண்டு. சுவையிலும் சூப்பர் என்று சொல்ல வைக்கக் கூடிய இந்த மீன் பிரியாணியை ஒரு முறை நீங்களும் ருசித்துப் பாருங்களேன். தேவையான பொருட்கள் மீன் - 1/4 கிலோ அரிசி - 2 ஆழாக்கு வெங்காயம் - 150 கிராம் தக்காளி - 150 கிராம் இஞ்சி, பூண்டு விழுது - 2 டீ ஸ்பூன் புதினா, கொத்தமல்லி இலை - 1/4 கட்டு மிளகாய்த்தூள் - 1 டீ ஸ்பூன் தனியாத்தூள் - 1 டீ ஸ்பூன் மஞ்சள்தூள் - 1/4 டீ ஸ்பூன் தயிர் - 1 கப் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - 1/2 குழிக் கரண்டி செய்முறை * மீனை சுத்தம் செய்து துண்டுகளாக்கவும். * வெங்காயம், தக்காளியை பொடியாக நீள வாக்கில் நறுக்கவும். மிளகாயைக் கீறிக்கொள்ளவும். * ஒரு அகலமான பாத்திரம் அல்லது குக்கரில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம் சேர்த்து தாளிக்கவும். * வெங்காயம், இஞ்சி-பூண்டு விழுது, தக்காளி, புதினா, கொத்தமல்லி இலை இவற்றை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து வதக்கவும். * தயிர் மற்றும் ப...

ஊட்டச்சத்து மிக்க பானம் தயாரிக்கும் முறை

                                   குழந்தைகளும் பெரியவர்களும் விரும்பும் சத்தான பானமாக இருக்கும். இதில் புரதம், கொழுப்பு, மாவுச்சத்து, கலோரி, சுண்ணாம்பு, பாஸ்பரஸ், இரும்பு, வைட்டமின் ஏ, பி1, பி2, நையாசின், பி6, போலிக் ஆசிட், கோலின், வைட்டமின் சி, சோடியம், பொட்டாசியம், மெக்னீசியம், காப்பர், துத்தநாகம், குரோமியம், சல்பர், குளோரின், மாலிப்டினம் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. தேவையான பொருள்கள் கேழ்வரகு- 150 கிராம் கம்பு- 150 கிராம் சோளம்- 100 கிராம் சம்பாக்கோதுமை- 100 கிராம் மக்காச்சோளம்- 100 கிராம் புழுங்கல் அரிசி- 75 கிராம் ஜவ்வரிசி- 25 கிராம் பார்லி- 50 கிராம் பாசிப்பயறு- 100 கிராம் பொட்டுக்கடலை- 100 கிராம் சோயாபீன்ஸ்- 20 கிராம் நிலக்கடலை- 20 கிராம் முந்திரிப் பருப்பு- 5 கிராம் பாதாம் பருப்பு- 5 கிராம் ஏலக்காய்- 2 கிராம். செய்முறை கேழ்வரகு, கம்பு, சோளம், பாசிப் பயறு ஆகியவற்றைச் சுத்தம் செய்து நீரில் ஒருநாள் ஊற வைக்கவும்....

உங்க வீட்டு சுட்டி நல்லா ஹெல்தியா வளரணுமா?

இந்த காலகட்டத்தில் குழந்தைகளை நல்ல ஆரோக்கியத்துடன் வளர்ப்பது என்பதே தாய்மார்களுக்கு கஷ்டமான காரியமாக உள்ளது.ஆனால் அந்த காலத்தில் எல்லாம் இயற்கையான உணவை உண்டு குழந்தைகள் ஆரோக்கியமாக, திடகாத்திரமாக வளர்ந்தன. தற்போது நம்முடைய உணவுப் பழக்க, வழக்கமே மாறிப் போய் விட்டது. இதனால், குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து அளிக்க வேண்டியது அவசியம். இல்லத்தரசிகள் நேரத்தை கொஞ்சம் செலவிட்டு, முயற்சி செய்தாலே வீட்டிலேயே ஊட்டச்சத்து மிக்க பவுடரை தயார் செய்து விடலாம். குழந்தைகளும் பெரியவர்களும் விரும்பும் சத்தான பானமாக இருக்கும். இதில் புரதம், கொழுப்பு, மாவுச்சத்து, கலோரி, சுண்ணாம்பு, பாஸ்பரஸ், இரும்பு, வைட்டமின் ஏ, பி1, பி2, நையாசின், பி6, போலிக் ஆசிட், கோலின், வைட்டமின் சி, சோடியம், பொட்டாசியம், மெக்னீசியம், காப்பர், துத்தநாகம், குரோமியம், சல்பர், குளோரின், மாலிப்டினம் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. தேவையான பொருள்கள் கேழ்வரகு- 150 கிராம் கம்பு- 150 கிராம் சோளம்- 100 கிராம் சம்பாக்கோதுமை- 100 கிராம் மக்காச்சோளம்- 100 கிராம் புழுங்கல் அரிசி- 75 கிராம் ஜவ்வரிசி- 25 கிராம் பார்லி- 50 கிராம் பாசிப்பயறு- 100 கிராம் பொட...

பாம்பு கனவில் வந்தால்...

    நிறைவேறாத ஆசைகளின் ஒரு பகுதியே கனவுகளாக வெளிப்படுகிறது. பாம்புகளை அடிக்கடி கனவில் பார்ப்பது ஒரு வகையில் நல்லது என்றே சொல்லப்படுகிறது. 1. ஒற்றை நல்ல பாம்பைக் கனவில் கண்டால் விரோதிகளால் தொல்லை உண்டாகும். 2. இரட்டைப் பாம்புகளை கண்டால் நன்மை உண்டாகும். 3. பாம்பை கொல்வதாக கனவு கண்டால் விரோதிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும் . 4. பாம்பு கடித்து விட்டதாக கனவு கண்டால் தனலாபம் உண்டாகும். 5. பாம்பு விரட்டுவதாக கனவு கண்டால் வறுமை உண்டாகும். 6. காலைச்சுற்றி பாம்பு பின்னிக்கொள்வது போல் கனவு கண்டால் சனி பிடிக்கப் போகிறது என்று பொருள். 7. பாம்பு கடித்து ரத்தம் வருவதாக கனவு கண்டால் பிடித்த சனி நீங்கிவிட்டது என்று அர்த்தம். 8. கழுத்தில் மாலையாக பாம்பு விழுவதாக கனவு கண்டால் பணக்காரன் ஆகலாம். இதேபோன்று கனவில் கரும்பூனையை(முற்றிலும் கருப்பாக இருக்கும் பூனை) பார்ப்பதும் நல்ல சகுனமாக கருதப்படுகிறது. கனவில் மட்டுமின்றி சாதாரணமாகவே அதுபோன்ற பூனையைப் பார்ப்பது நல்லதாம்.

ஒரு நிமிடக் கதை: அழகு

தரகர் கொண்டு வந்து கொடுத்த படத்தில் இருந்ததை விட நேரில் இன்னும் சுமாராகத் தான் இருந்தாள் மேனகா. மாதவன், திருப்தி இல்லாதவனாய் நிமிர்ந்து தன் அம்மா அப்பாவைப் பார்த்தான். அவர்கள் முகத்தில் தெரிந்த சந்தோஷமும் பெண் வீட் டாரிடம் மேற்கொண்டு செய்தி களைப் பேசுவதுமாக இருந்ததை யும் பார்க்கும் பொழுது, இந்த இடம் அவர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது என்பதைப் பறைசற்றியது. என்ன செய்யலாம் என்ற யோசனையுடன் தாயைத் தனி யாக வெளியில் அழைத்து வந்தான். “அம்மா... தரகர் இன்னொரு பெண்ணோட படத்தைக் காட்டி னார் இல்லையா? அந்தப் பெண் ணையும் பார்த்துடலாம்” என்றான் மாதவன். அம்மாவிற்குக் கொஞ்சம் ஏமாற்றம். இருந்தாலும் சமாளித் துக்கொண்டு, “சரிப்பா, பார்த்தி டலாம்... ஆனால் இந்தப் பெண்ணே நல்ல குடும்பப் பாங்கா இருக்கிறா. குடும்பமும் நல்ல குடும்பமா தெரியுது. உனக்கும் ஏத்த ஜோடியாவும் தெரியுது. மீதி எல்லாமே பொருந்தி வருது...” என்று பேச்சை இழுத்தாள். “நான் அந்தப் பெண்ணையும் பார்க்கணும். அவ படத்துலே இவளை விட அழகா இருந்தாள். எனக்கு அவளைக் காட்டுங்கள்” என்று பிடிவாதமாகச் சொன்னான் மாதவன். வேறு வழியில்லை. அனை வரும் அந்தப்பெண்ணைப் போய்ப...

காது கேட்காத தவளை

மூன்று தவளைகள் ஒரு மலையின் உச்சிக்கு ஏறுவதற்கு தயாராகின . அவை மலையேற ஆரம்பிக்கும் போது பார்வையாளராக இருந்த ஒருவர் " இவளவு உயரமான மலையில் ஏறும்போது வழியில் கற்கள் தடக்கி விழுந்தால் அவ்வளவுதான் " என்றார் . உடனே ஒரு தவளை மலை ஏறுவதை நிறுத்தி விட்டது . சிறுது தூரம் சென்றவுடன் இன்னொருவர் " மேலே செல்லும்போது பாம்புகள் பிடித்து விட்டால் என்ன செய்யப் போகின்றன " என்றார் . உடனே இரண்டாவது தவளையும் கீழிறங்கிவிட்டது . ஆனால் யார் என்ன சொன்னாலும் கேட்காத மூன்றாவது தவளை மட்டும் மலை உச்சியை சென்றடைந்தது . பின்னர் கீழிறங்கிய அந்தத் தவளையிடம் அங்கிருந்த ஒருவர் " உன்னால் மட்டும் எப்படி இவர்கள் எல்லோரும் எதிர்மறையாக கூறியும் துணிந்து சிகரத்தை அடைய முடிந்தது " என்று கேட்டார் . அதற்கு அந்தத் தவளை " எனக்குக் காது கேட்காது " என்றது . நாமும் வாழ்வில் இந்த தவளையை போல இருந்தால் தான் சில நேரங்களில் முன்னேற முடியும் .

நினைவாற்றலை அதிகரிக்கும் உணவுகள்

உடலில் உள்ள எந்த உறுப்பையும்விட அதிக அளவு ஆக்ஸிஜனை எடுத்துக்கொள்வது மூளைதான். தேவையான சத்துணவு, தேவையான அளவு கிடைக்காதபோது மூளைக்குக் கிடைக்கும் ஆக்ஸிஜன் அளவு குறைகிறது. அதனால் மூளையின் செல்கள் அழிந்துவிடுதல், ‘அல்ஸீமர்ஸ்’ என்ற ஞாபகமறதி நோய், ஞாபகச் சக்தியை - ஒருமுகக் கவனத்துடன் செயல்படும் ஆற்றலை இழப்பது, பலவீனம், குழப்பம், நோய் தாக்குதல் முதலியவை ஏற்படுகின்றன. மூளைக்கு எப்போதும் ஞாபகசக்தி இருக்க வேண்டும். அதற்குக் கொழுப்பு, வெண்ணெய், நெய் முதலியவற்றிலிருந்து கிடைக்கும் கொழுப்பு தீங்கானது. மூளைக்கு உதவும் சரியான உணவைத் தேர்ந்தெடுக்க ஓர் எளிய வழி உண்டு. ஒளிரும் நிறத்தில் இருக்கும் உணவு வகைகள் மூளையின் பசியைப் போக்கும் முக்கிய உணவு வகைகளாகும். ஏனென்றால், இந்த உணவு வகைகளில் போதுமான அளவு வைட்டமின்கள், தாது உப்புகள் போன்றவை உள்ளன. ஞாபகசக்திக்கு ஞாபகசக்தி குறைவாக இருப்பவர்கள் ஆரஞ்சு, கொய்யா, திராட்சை, ஆப்பிள், வாழைப்பழம், செர்ரி பழம், தக்காளி, முலாம் பழம், பேரீச்சம்பழம், காரட், அன்னாசி, காலி பிளவர், முட்டை கோஸ், பசலைக் கீரை, கொத்துமல்லி, வல்லாரை, முருங்கைக் கீரை, கறிவேப்பிலை, பச்சைப் பட்டாணி...